Posts

மாற்றங்கள்

Image
மாற்றங்களே இல்லா உலகினை நாம் பார்க்க முடிகிறதா? இல்லையே! மாற்றங்கள் எல்லா உயிரினங்களிலும்  இடைவிடாது நடந்துக்கொண்டே தானே இருக்கிறது.?  விதையில் ஏற்படும் மாற்றம் வேராக,பின்பு மரமாகி நிற்கவில்லையா? குழந்தையின் மாற்றம் நாளை மனிதன். இன்றைய தோல்வி நாளைய வெற்றி இன்றைய சேமிப்பு  நாளைய முதலீடு இன்றைய  துன்பம் நாளைய இன்பம். இன்றைய வலிகள்  நாளைய வளர்ச்சி. அதனால் தான் என்னவோ பெரியோர்கள், ஆண்டவன் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பான் என்றார்களோ! மாற்றங்களே மாற்றம் இல்லாதது. இவ்வுலகில் எல்லாவற்றிலும்  இடைவிடாது மாற்றங்கள்நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது. 1) மாற்றங்கள் வளர்ச்சியை கொண்டு வருகின்றது. 2)மாற்றங்கள் மனமகிழ்ச்சியை அதிகரிக்கிறது 3)மாற்றங்கள் நம்மின் உணர்ச்சிகளை மாற்றுகிறது. 4)மாற்றங்கள் நம்பிக்கையை கொடுக்கிறது. 5) மாற்றங்கள் புதிய உறவுகளை கொண்டு சேர்க்கிறது. 6) மாற்றங்கள் புதிய , புதிய அனுபவங்களை கொண்டு சேர்க்கின்றது.    மிதி வண்டியில் பயணித்த நாம் இன்றைய தலைமுறையினர் ஸ்கூட்டருக்கும் ஏன்   வானஊர்த்திக்கும்  மாறி விட்டதை பார்க்கிறோம்...

குரங்கு குட்டியும் பூனை குட்டியும்

Image
பக்தியில் பலவகை இருந்தாலும் பகவான் இராமகிருஷ்ணரின் பக்தியோ சற்று வித்தியாசமானது. பாமர மக்களுக்கும் புரியும் வகையில் சின்ன,சின்ன கதைகள் மூலமாக விளக்குவார்.பக்தியை இரண்டு வகையாக பிரிக்கிறார். 1) குரங்கு குட்டி பக்தி 2) பூனை குட்டி பக்தி குரங்கு குட்டி  தாயின் வயிற்றை இறுக பற்றிக்கொள்கிறது. தாய் குரங்கு கிளைக்கு,கிளை தாவினாலும் சரி,நடந்தாலும் சரி அதன் பிடியை விடுவதே இல்லை.அதைபோலத்தான் இவ்வகை பக்தனும்.எவ்வளவுதடைவந்தாலும்,துயரங்கள் வந்தாலும்சரி ,குரங்குகுட்டியை போன்றே இவன் இறைவனின் மேலுள்ள நம்பிக்கையை விடுவதே இல்லை அபிராமி பட்டர் நாயன்மார்கள்,ஆழ்வார்களை போல. நீயல்லால் எனக்கு யார் கதி? கல்லுடன் கட்டி கடலில் பாய்ச்சினும் சொல்லும் நாமம் நமச்சியாயவே! இறைவனின்நாமத்தை கெட்டியாக, குரங்கு குட்டி தாயின் வயிற்றை இறுக பற்றிஇருக்கும் படி , கொண்ட உறவுகள் கை விட்டு. உன்னை வீதியில் தள்ளினாலும் மனம் தளராது சிந்தையை அவன் தாளில் வைத்திருப்போர்க்கு துயர் தான் பாதிக்குமா? தாய் குரங்கை பற்றிய குட்டிக்கு தான் கீழே விழமாட்டேன் என்று நம்புவதை போன்றே இறை சிந்தனையில் இருப்போர்க்கு இறைவன் காப்பாற்றுகிறான். பூனை ப...

வாழ்க்கை

Image
நல்ல வாழ்க்கை எது தெரியுமா.. நன்றாக வாழ்வது அல்ல.. கிடைத்த வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் வீணடிக்காமல் வாழ்ந்தோம்.. நாலு பேருக்கு நலம் பயக்காவிட்டாலும் கூட.. அவர்களைப் பாதிக்காத வாழ்க்கை வாழ்ந்தோம் என்பதுதான்.  வாழும் வாழ்க்கையை அழகாக்குவது பணமோ,புகழோ மட்டுமல்ல,நாம் பெரும் மனநிம்மதியும்  ஆரோக்கியமான உடலும்,மனமும் கூடத்தான்.            ஆரோக்கியமான உடல்:- இதற்கு உணவில் மனக்கட்டுபாடு மிகவும் அவசியம். நம் மனம் விரும்பும் உணவை சாப்பிடாது,உடல் கேட்கும்  உணவை  சாப்பிட கற்றுக்கொள்ள வேண்டும்.  உடற்பயிற்சி மிகவும் அவசியம்.எந்த வயதினர்களாக இருந்தாலும் அவரவர் வயதிற்கேற்ப பரிந்துரைக்கும் உடற்பயிற்சியினை,  பரிந்துரைக்கும் நேரங்களில் செய்வது அவசியம். இக்காலங்களில் பணம் சம்பாதித்து கஷ்டமில்லாத வாழ்க்கையை தான் மட்டுமில்லாது தன்னை சார்ந்தவர்களும் வாழ பசியை பார்க்காது கண் துன்ஜாது ஓடி,ஓடி உழைக்கிறார்கள். அதனால் என்ன பயன்? ஆரோக்கியம் கெட்டு, சம்பாதித்த பணத்தை மருத்துவத்திற்காக செலவழிக்க வேண்டி வருகிறது.  உடல் கெட்டவுடன் மனமும் சோர்வடைந்து வி...

பீஷ்மம்

Image
 #பிதாமகரின் பீஷ்மம். பிரம்மசரியம் மட்டும் கடைபிடிப்பதில்லை பீஷ்மம் .இறுதிவரை இந்த மண்ணை ஆளுவதற்கு ஆசைபடாது,தன் குலத்தை காக்க,நாட்டை காக்க உழைப்பதுதான் பீஷ்மம் என்பதனை இவ்வுலகிற்கு உணர்த்தியவர் தான் பீஷ்மர் . களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர் என்ற செய்தி கர்ணனை அடைந்ததும், அதிர்ந்துபோனான். எவர் வீழ்த்தியது என ஆவேசப்பட்டான். அர்ஜீனனின் பெயர் கேட்டவுடன் கொதித்தான்.  பிதாமகரை அத்தனை எளிதாய் வீழ்த்திவிட்டானா அர்ஜீனன் ?.. என கோபப்பட்டான் கர்ணன். இல்லை. சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை வீழ்த்திவிட்டார்கள்.. என்றான் தகவல் கொண்டுவந்த வீரன். அதர்மத்தின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று எங்களை குறைகூறிய பாண்டவர்களே, அதர்மத்தினைக் கையாளுவதுதான் தர்மமா ? அர்ஜீனா.. இதோ வருகிறேன். சந்திக்கிறேன் உன்னை களத்தில். உன்னைக் கொல்லவேண்டும் என நான் நினைத்ததற்கான காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கூடிக்கொண்டே போகின்றன.. என தனக்குள் பொங்கினான்.  இறுதியாக ஒருமுறை, பீஷ்மரின் திருமுகத்தைக் கண்டுவரக் கிளம்பினான் குருஷேத்திரம் நோக்கி. கௌரவர் சேனையும், பாண்டவர் சேனையும் அணிவகுத்து நின்று, ஒவ்வொருவராய் பீஷ்மரைக்...

ஞானம் by velukudi krishnam

Image
  ஞானத்தை இரண்டு வகையாக நம் வேதங்கள் பிரித்திருக்கின்றன.அவை மெய்ஞானம் விஞ்ஞானம் மெய்ஞானம்   அழியாத,மாற்றடையாதது மெய்ஞானம். ஆத்மாவோ,ஆண்டவனோ,பஞ்ஜபூதங்களோ மாற்றமடையாதது,மட்டுல்ல,அது அழியாததும் ஆகும். விஞ்ஞானம்:- அழியக்கூடியது,மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. மெய்ஞானம் இல்லாது விஞ்ஞானம் இல்லை. இதை விளக்க ஒரு உதாரணத்தை காட்டுகிறார். அரிசியை வேக வைத்தால் சோறு கிடைக்கிறது.எப்படி?   இதற்கு விஞ்ஞானம் கண்டு பிடித்த அடுப்பு மட்டும் போதுமா? இல்லையே!அதற்கு ஒரு பாத்திரம் வேண்டும். அது மண் பாத்திரமோ அல்லது உலோகமோ,அது செய்வதற்குண்டான மூலப்பொருள் பூமியிலிருந்து தான்  கிடைக்கிறது.( நிலம் ). அடுத்து அதை கழுவவேண்டுமே!அதற்கு தண்ணீர் தேவை.( நீர்) வேக வேண்டும் என்றால் நெருப்பு தேவை. நெருப்பு எரிய. காற்றின் துணை தேவை. கால் பங்கு அரிசிக்கு மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் முக்கால் சட்டி அல்லது முழு சட்டி சோறு கிடைக்கிறது.அரிசி சோறாக மாறும் போது சட்டியிலுள்ள வெற்றிடத்தை ஆக்ரமித்துக் கொள்கிறது. அந்த வெற்றிடம் தான் ஆகாயம் . பஞ்ஜ பூதங்கனின்  துணை எந்த ஒரு கண்டு பிடிப்பிற்கும் தே...

அலகிலா விளையாட்டுடையான்

Image
உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டு உடையான் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே (கம்பராமயணம் பாயிரம்)  இறைவனும் தாயும் தம் பிள்ளைகளை பேணுவதில் ஒத்துயிருக்கிறார்கள் ஆம், சிந்தித்து பாருங்கள். ஒரு தாய் தன்  குழந்தைக்கு எப்படியெல்லாம் விளையாட்டு காட்டி மகிழ்விக்கிறாள். பொய்கோபம் காட்டுகிறாள்.குழந்தை அதை உண்மை யென்று அழும் போது வாரியணைத்து உச்சி முகர்கிறாள்.கேட்கும் பொருளை மறைத்து போக்கு காட்டி Surpriseஆக கொடுத்து அதன் மனம் மகிழ்வதைக் கண்டு இவள் மகிழ்கிறாள். தடம் மாறும் போது தண்டிக்கிறாள். நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டுவதும், நன்றாக வாழும் போது மகிழ்வதும் அவளே தான். படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல்என்றஐந்தொழில்களையும் செய்கிறாள் . இந்உலகமே ஆண்டவனின் விளையாட்டிற்காக படைக்கப்பட்டதுதானேஉயிர்களைபடைக்கிறான்,காக்கிறான்,பின் அவனே அதை அழித்து தன்னிடமே சேர்த்துக்கொள்கிறான்.இது எப்படி இருக்கிறதுஎன்றால்குழந்தைகள்மண்வீடுகட்டிவிளையாடுகிறது,விளையாடிசலித்தவுடன்அதேதன் காலால் எட்டியுதைத்து கலைத்து விடுகிறதல்லவாஅதுபோலத்தான்இறைவனின்திருவிளையாடல்...

தவம் என்பது யாதெனில்........

Image
தவம் என்பது தனியாக ஓர் இடத்தில் அமர்ந்து இறைவனிடத்து ஒரு காரியம் நிறைவேற்றுமாறு வேண்டுவது மட்டும் தவமல்ல. ஒரு குறிக்கோளை அடைய , விடாது செய்யும் முயற்சி கூட தவமேயாகும். இது மூன்று வகைப்படும் . 1) காமிய தபஸ் :- துருவன் செய்தது,காரிய தபஸ். தான் உயர் நிலை அடைய செய்தது. இது சுயநலமானது. தனக்காக செய்வது. 2) அஸூர தபஸ்: -  தன் உடலை வருத்தி செய்வது,இராவணன்,ஹிரண்யகசிபு போல. 3) தெய்வீக தபஸ்:- வால்மீகி,திருநாவுக்கரசர்,விவேகானந்தர், போல இந்த சமுதாயத்திற்காக,அதன் நன்மைக்காக செய்வது.  இதில் மூன்றாவது வகை தபஸ் தான் எல்லாவற்றிலும் சிறந்தது.தன் நலம் கருதாது பிறர் நலம் கருதி செய்யும் தொண்டே சிறந்த தவம். ஏனென்றால் இவ்வுலகை படைத்த இறைவனின் மனம் மகிழ இவ்வுலகம்  சிறப்புடன் வாழ தொண்டு செய்கிறார்கள் அல்லவா! தவம் என்பது உடல் ,மொழி, உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது. இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று  தொடர்புடையது. உடலின் செய்யும் தவம்: - எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும் ,உடல் சோர்வடைந்தாலும், அதை பொருட்படுத்தாது, உடலை வருத்திக்கொண்டு எடுத்த காரியத்தைமுடிப்பது.உண்ணாநோன்பு,பூ மிதித்தல்,கிரி வலம் வருதல்,...