தேடலில் தெளிவு
தேடல் தொடங்கு முன்னரே நாம் எதை தேடப்போகிறோம்,எதற்காக தேடவேண்டும் என்பதில் தெளிவு பிறக்க வேண்டும்.தெளிவற்ற தேடல், பொன்னான நம் நேரத்தை வீணாக்குவதில் தான் முடியும். இதில் எஞ்சுவது ஏமாற்றமே! இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் தேடல் உள்ளது.தேடல் இல்லாது தெளிவுயில்லை.தேடல் பல விஷயங்களை நோக்கி நடக்கிறது. சிலர் பொருளை தேடி அலைகின்றனர்.மற்றும் சிலர் பதவியையும்,புகழையும் தேடி ஓடுகின்றனர்.இவை கிடைத்தால் மகிழ்கின்றனர்.இல்லையெனில் சோர்வடைகின்றனர்.கிடைக்கப்பெற்றவர்கள்அதை தக்க வைத்துக்கொள்ள போராடுகின்றனர்,கிடைக்காதவர்கள் அதை பெறுவதற்கு போராடுகின்றனர். இப்படி தம் வாழ்க்கையைப் பேராட்டத்தில் கழித்து நிம்மதியில்லாமலேயே வாழ்ந்துவிடுகின்றனர். நிலையான நிம்மதியை பெற அறிவு இருந்தும் அதை பெற முயற்சிப்பதில்லை இதில் எதை தேடினாலும் அத்தேடலுக்கான அறிவை கொடுப்பது இறைவன். இந்த அறிவானது நம் எல்லோருக்கும் பிறக்கும்போதே ஆண்டவனது கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை நல்லமுறையில்பயன் படுத்துவதும்,பயன்படுத்தாதும் நம் கையில் தான் உள்ளது. நாம் கற்றவற்றை இறைவனின் வரமாக நினைத்து நாலு பேர்களிடம் பகிர்ந்தால் த...