Posts

Showing posts from November, 2025

ஞானம் by velukudi krishnam

Image
  ஞானத்தை இரண்டு வகையாக நம் வேதங்கள் பிரித்திருக்கின்றன.அவை மெய்ஞானம் விஞ்ஞானம் மெய்ஞானம்   அழியாத,மாற்றடையாதது மெய்ஞானம். ஆத்மாவோ,ஆண்டவனோ,பஞ்ஜபூதங்களோ மாற்றமடையாதது,மட்டுல்ல,அது அழியாததும் ஆகும். விஞ்ஞானம்:- அழியக்கூடியது,மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. மெய்ஞானம் இல்லாது விஞ்ஞானம் இல்லை. இதை விளக்க ஒரு உதாரணத்தை காட்டுகிறார். அரிசியை வேக வைத்தால் சோறு கிடைக்கிறது.எப்படி?   இதற்கு விஞ்ஞானம் கண்டு பிடித்த அடுப்பு மட்டும் போதுமா? இல்லையே!அதற்கு ஒரு பாத்திரம் வேண்டும். அது மண் பாத்திரமோ அல்லது உலோகமோ,அது செய்வதற்குண்டான மூலப்பொருள் பூமியிலிருந்து தான்  கிடைக்கிறது.( நிலம் ). அடுத்து அதை கழுவவேண்டுமே!அதற்கு தண்ணீர் தேவை.( நீர்) வேக வேண்டும் என்றால் நெருப்பு தேவை. நெருப்பு எரிய. காற்றின் துணை தேவை. கால் பங்கு அரிசிக்கு மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் முக்கால் சட்டி அல்லது முழு சட்டி சோறு கிடைக்கிறது.அரிசி சோறாக மாறும் போது சட்டியிலுள்ள வெற்றிடத்தை ஆக்ரமித்துக் கொள்கிறது. அந்த வெற்றிடம் தான் ஆகாயம் . பஞ்ஜ பூதங்கனின்  துணை எந்த ஒரு கண்டு பிடிப்பிற்கும் தே...

அலகிலா விளையாட்டுடையான்

Image
உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டு உடையான் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே (கம்பராமயணம் பாயிரம்)  இறைவனும் தாயும் தம் பிள்ளைகளை பேணுவதில் ஒத்துயிருக்கிறார்கள் ஆம், சிந்தித்து பாருங்கள். ஒரு தாய் தன்  குழந்தைக்கு எப்படியெல்லாம் விளையாட்டு காட்டி மகிழ்விக்கிறாள். பொய்கோபம் காட்டுகிறாள்.குழந்தை அதை உண்மை யென்று அழும் போது வாரியணைத்து உச்சி முகர்கிறாள்.கேட்கும் பொருளை மறைத்து போக்கு காட்டி Surpriseஆக கொடுத்து அதன் மனம் மகிழ்வதைக் கண்டு இவள் மகிழ்கிறாள். தடம் மாறும் போது தண்டிக்கிறாள். நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டுவதும், நன்றாக வாழும் போது மகிழ்வதும் அவளே தான். படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல்என்றஐந்தொழில்களையும் செய்கிறாள் . இந்உலகமே ஆண்டவனின் விளையாட்டிற்காக படைக்கப்பட்டதுதானேஉயிர்களைபடைக்கிறான்,காக்கிறான்,பின் அவனே அதை அழித்து தன்னிடமே சேர்த்துக்கொள்கிறான்.இது எப்படி இருக்கிறதுஎன்றால்குழந்தைகள்மண்வீடுகட்டிவிளையாடுகிறது,விளையாடிசலித்தவுடன்அதேதன் காலால் எட்டியுதைத்து கலைத்து விடுகிறதல்லவாஅதுபோலத்தான்இறைவனின்திருவிளையாடல்...