இளைய சமுதாயமே! எங்கே செல்கிறாய்?
ஒரு நாட்டின் வளர்ச்சி, தேர்ச்சி, அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது, என்பதனை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால் இளவயது ஆண்களோ, பெண்களோ, இன்றைய கால கட்டத்தில் எப்படி உள்ளார்கள்? மூத்தோர் அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் படி நடந்துகொள்கிறார்களா? இல்லையே! இன்றைய மூத்த சமூதாயத்தின் கவலையே இன்றைய இளைய சமுதாயத்தை பற்றியதே ஏ!இளைய சமுதாயமே! நீ எதை நோக்கி பயணிக்கிறாய்? எதை அடைய இந்த வேகம்? சொல்! பயணம் :- உலக இன்பங்கள் எத்தனை உள்ளதோ அவை யாவையும் துய்த்து விட வேண்டும் என்ற தவிப்பு. ஆடம்பர வாழ்க்கை வாழ அடங்கா ஆவல். இதற்காக உற்ற உறவுகளை விட்டு விட்டு, பிறந்த நாட்டையும் துறந்து தொலை தூரம் செல்வதற்கும் தயாரே! என்னப்பா இது கொடுமை! விளக்கு வெளிச்சம் விட்டில் பூச்சியை ஈர்ப்பது போன்றே , இன்றைய புது ,புது கண்டுபிடிப்புகள் இவர்களை ஈர்க்கிறது? இது எப்படி காரணமாகும்? என்ற உங்கள் கேள்வி என் காதில் விழுகிறது. இன்று மிதி வண்டியை ஓட்டுபவர்கள், பைக்கின் வேகத்தை கண்டு, அதை வாங்க ஆசை கொள்கிறார்கள்.ஆமாம் , இதிலென்ன தப்பு? தப்புதான்.நேரத்தை மிச்சப்படுத்த நீண்ட தூரம் செல்வதற்கு ...