Posts

Showing posts from January, 2024

இளைய சமுதாயமே! எங்கே செல்கிறாய்?

Image
 ஒரு நாட்டின் வளர்ச்சி, தேர்ச்சி, அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது, என்பதனை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால் இளவயது ஆண்களோ, பெண்களோ, இன்றைய கால கட்டத்தில் எப்படி உள்ளார்கள்? மூத்தோர்  அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் படி நடந்துகொள்கிறார்களா? இல்லையே! இன்றைய மூத்த சமூதாயத்தின் கவலையே இன்றைய இளைய சமுதாயத்தை பற்றியதே ஏ!இளைய சமுதாயமே! நீ எதை நோக்கி பயணிக்கிறாய்? எதை அடைய இந்த வேகம்? சொல்!  பயணம் :- உலக இன்பங்கள்  எத்தனை உள்ளதோ அவை யாவையும் துய்த்து விட வேண்டும் என்ற தவிப்பு. ஆடம்பர வாழ்க்கை வாழ அடங்கா ஆவல். இதற்காக உற்ற உறவுகளை விட்டு விட்டு, பிறந்த நாட்டையும் துறந்து தொலை தூரம் செல்வதற்கும் தயாரே!  என்னப்பா இது கொடுமை! விளக்கு வெளிச்சம் விட்டில் பூச்சியை ஈர்ப்பது போன்றே , இன்றைய புது ,புது கண்டுபிடிப்புகள் இவர்களை ஈர்க்கிறது? இது எப்படி காரணமாகும்? என்ற உங்கள் கேள்வி என் காதில் விழுகிறது.  இன்று மிதி வண்டியை ஓட்டுபவர்கள், பைக்கின் வேகத்தை கண்டு, அதை வாங்க ஆசை கொள்கிறார்கள்.ஆமாம் , இதிலென்ன தப்பு? தப்புதான்.நேரத்தை மிச்சப்படுத்த நீண்ட தூரம் செல்வதற்கு ...

பிள்ளை வளர்ப்பு

Image
  இந்த மண்ணில் பிறக்கும் எல்லோரும் நல்லவரே! சரியில்லாத வளர்ப்பினாலும்,  தகுதியில்லாத நட்பினாலும், சூழ்நிலையாலுமே, ஒருவன் கெட்டவனாகிறான்.  வளர்ப்பு:- நாடு நலமாக இருக்க வேண்டுமானால், சமுதாயம் சிறந்ததாக இருக்க வேண்டும். சமுதாயம் சிறக்க, அதன் அங்கமான குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும். இதற்கு குடும்ப உறுப்பினர்கள் நற்சிந்தனையோடு இருக்கவேண்டும். ஆகவே ஒரு நாட்டின் பெருமை குடிமகனின் கையில் தான் உள்ளது. நன்மக்கள் பெற்று வளர்ப்பதில் தான் பெற்றோர்கள் பெருமை அடங்கியுள்ளது. மக்களை பெற்றவர்கள் பெருமை படுவதில் மட்டும் நின்று விடுவதில்லை,  பெற்றோர்களை பார்த்து மற்றவர்கள் இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல் என்பதற்கேற்ப பெற்றோர்களும்  நடந்துகொள்ள வேண்டும்.  பிள்ளை வளர்ப்பு:-  1)பிள்ளை கர்பத்தில் வளரும் போதே எப்படி ஊட்டமான உணவினை உண்கிறாறோ, அப்படியே நல்ல விஷயங்களை மட்டும் கர்பத்தை சுமக்கும் தாய் கேட்டு உள் வாங்க வேண்டும். உ.ம்:- பிரகலாதன் கதை. 2) குழந்தை பருவத்திலிருந்தே நல்ல ஆன்மீககதைகளையும்,நீதிக்கதைகளையும்  அறிமுகப்படுத்த வேண்டும். 3) நேர்மறை சுற்றுசூழல், நே...