Posts

Showing posts from September, 2022

அநுபவங்கள்

Image
அனுபவம் என்பது பட்டறிவு என்பதனை நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த அனுபவங்களை, தான் கற்ற பாடங்களாக  ஏற்று, விழிப்புடன் செயல்படுபவர்கள் வாழ்க்கை என்னும் கடலில் நீந்தி கரை சேர்கிறார்கள். அனுபவங்களின் முக்கியத்துவம்.   கல்வி என்பது கல்விக்கூடங்களில் கற்றுக்கொடுக்கும் கல்வி மட்டுமல்ல. ஒருவன் பட்டங்கள் பல பெற்றிருக்கலாம்,ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற்றவராக  இருப்பதில்லை. அதனால் தான் நம் பெரியவர்கள் ," ஏட்டுசுரைக்காய் ,கறிக்கு உதவாது". என்று கூறினர்.  ஏட்டில் சுரைக்காய் நிறம்,வடிவம், சுவை பற்றிய விவரங்களை அறியலாம். ஆனால் இதைக்கொண்டு  ( அந்த ஏட்டைக்கொண்டு) நாம் அடுப்பில் வைத்து சாப்பிடக்கூடிய கறியை சமைக்க முடியாது.  நாம் ஆசிரியர்களிடம் எவ்வளவு கற்றுக்கொண்டாலும், செய்முறை பயிற்சி மூலம் கற்றுகொண்டதற்கு ஈடாகாது. அது எளிதில் மறக்கவும் மறக்காது. அனுபவங்களை ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்று  பருவங்களில் ஏற்படுவதாக பிரித்துக்கொள்வோம்.  1) குழந்தை பருவம்.  2)  இல்லறபருவம் 3)  முதுமை பருவம். குழந்தை பருவம்:-    இந்த பருவத்தில் மனது துடைத்து வை...

கடவுளை தேடலாமா!

Image
 கடவுளை தேடும் முன் அப்படி ஒருவர் இருக்கிறாரா? என்பதை தெளிவு படுத்துதல் நலம் இல்லையா? ஸ்வாமி விவேகனந்தரும் இக்கருத்தை தான் கொண்டிருந்தார். கடவுள் என்ற ஒன்று இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா? அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அவரை பார்க்க முடியுமா? அவருடன் பேச முடியுமா? பார்த்தவர்கள் எவ ரேனும் உள்ளனரா?  இத்தனை கேள்விகளும் விவேகானந்தருக்கு மட்டுமல்லாது நம்மில் பலருக்கும் உள்ளது. இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்க விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ணர் இருந்தார். கடவுளை பார்த்துள்ளீரா? என்ற கேள்விக்கு ஒரு கணம் கூட தாமதிக்காது ,"ஏன்,உன்னை நான் இப்போது பார்த்துக்கொண்டிருப்பதை விட மிகத் தெளிவாக பார்த்திருக்கின்றேனே ". இந்த மாதிரியான ஒரு தெளிவான அதே சமயம் , உறுதியான பதிலுக்காகக் தான் எங்கெங்கோ அலைந்து திரிந்தார்.இப்போது மனம் சற்றே நிம்மதி அடைந்தது. இந்த பதிலின் நம்பகத்தன்மையை உறுதி படுத்த இராம கிருஷ்ணரை பல வகையிலும் சோதித்தித்த பிறகே அவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார்.   சாதாரண மனிதர்களாகிய நாம்,இந்த பிரபஞ்சத்தை கூர்ந்து நோக்கஆரம்பித்தாலே கடவுளை பற்றிய ஒரு தெளிவு பிறக்கும். பின் வரும் கே...