அநுபவங்கள்
அனுபவம் என்பது பட்டறிவு என்பதனை நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த அனுபவங்களை, தான் கற்ற பாடங்களாக ஏற்று, விழிப்புடன் செயல்படுபவர்கள் வாழ்க்கை என்னும் கடலில் நீந்தி கரை சேர்கிறார்கள். அனுபவங்களின் முக்கியத்துவம். கல்வி என்பது கல்விக்கூடங்களில் கற்றுக்கொடுக்கும் கல்வி மட்டுமல்ல. ஒருவன் பட்டங்கள் பல பெற்றிருக்கலாம்,ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற்றவராக இருப்பதில்லை. அதனால் தான் நம் பெரியவர்கள் ," ஏட்டுசுரைக்காய் ,கறிக்கு உதவாது". என்று கூறினர். ஏட்டில் சுரைக்காய் நிறம்,வடிவம், சுவை பற்றிய விவரங்களை அறியலாம். ஆனால் இதைக்கொண்டு ( அந்த ஏட்டைக்கொண்டு) நாம் அடுப்பில் வைத்து சாப்பிடக்கூடிய கறியை சமைக்க முடியாது. நாம் ஆசிரியர்களிடம் எவ்வளவு கற்றுக்கொண்டாலும், செய்முறை பயிற்சி மூலம் கற்றுகொண்டதற்கு ஈடாகாது. அது எளிதில் மறக்கவும் மறக்காது. அனுபவங்களை ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்று பருவங்களில் ஏற்படுவதாக பிரித்துக்கொள்வோம். 1) குழந்தை பருவம். 2) இல்லறபருவம் 3) முதுமை பருவம். குழந்தை பருவம்:- இந்த பருவத்தில் மனது துடைத்து வை...