Posts

Showing posts from May, 2024

பணம் படுத்தும் பாடு

Image
       அமுதா ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தாள். தன் ஒரே பேரனுக்கு விடிந்தால் கல்யாணம். மனம் விச்ராந்தியாக கிடக்க என்ன காரணம்? இதுதான் அவளது சிந்தனை. பேரன் மிகுந்த புத்தி உள்ளவன். பாட்டியின் மீது மிகுந்த பாசம் கொண்டவன். எந்த பிரச்சனைக்கும் நடைமுறையில் ஒத்து போகக்கூடிய வகையில் தீர்வைசொல்பவன். அமுதா பாட்டியே பல முறை பேரனிடம்  தன் பிரச்சனைகளுக்கு உதவியை நாடியுள்ளார். ஆனால் இப்போது கல்யாண மகிழ்ச்சியில் இருக்கும் அவனிடம் தன் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள முடியாது.  மனம் கடந்த கால நிகழ்வுகளை அசை போட ஆரம்பித்தது. தன் மீது உயிரையே வைத்திருந்த கணவர் சேகர். மகன் ஹரி, மகள் கோதை. இவ்வளவு தான் குடும்பம். பிள்ளைகள் இருவரிடமும் மிகுந்த பாசம் இருவருக்கும். இந்த பாசம் தான் இப்போது வினையாக வந்து முடிந்திருக்கிறது.  கால் ரொம்ப வலிக்கிறதா? நீ போய் படுத்துக்கொள் அமுதா, நான் t.v சிறிது நேரம் பார்த்து விட்டு வந்து படுக்கிறேன். நான் போய் விட்டாலும் நீ பிழைத்துக்கொள்வாய். உங்களுக்கு போதுமான சொத்து சேர்த்து வைத்துள்ளேன்.  என்ன உன் மகனால் தான் தொந்தரவு இருக்கும்.என்றார் சேகர். ...

இறைவன் என்ற ஒனறு உள்ளதா?

Image
 இந்த தலைப்பு ஆண்டாண்டு காலமாக மாபெரும் விவாதத்திற்கு ஒன்றான பொருளாக விளங்குகிறது. ஒவ்வொருவரும் அவரவர்க்கு உள்ள மனதின் போக்கிற்கேற்ப விளக்கம் கொடுக்கிறார்கள்.  சிலர் இருக்கிறார் என்கின்றனர், சிலர் இல்லை என்கின்றனர், மற்றும் சிலர் அது இயற்கை என்னும் சக்தியே என்பார்கள். வேறு சிலரோ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை , மனிதனே தான் தெய்வம் என்கின்றனர். இந்த விவவாதத்தில் இறுதியாக சொல்லப்பட்ட மனிதனே தெய்வம் என்னும் கூற்றை எடுத்துக்கொள்வோமா? மனிதனே தெய்வமெனில்  இயற்கையில் நடக்கும் நிகழ்வுகளை ஏன் மாற்றியமைக்கவோ, நிறுத்தவோ, முடிவதில்லை? உதாரணமாக, கிழக்கே உதிக்கும் சூரியனை  ஏன் மேற்கே உதிக்கவைக்க முடிவதில்லை? இல்லை பத்து மாதத்தில் பிறக்க வேண்டிய குழந்தையை ஒரு 15 அல்லது 20 மாதத்தில் பிறக்க வைக்க முடிவதில்லை? விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியுள்ளது  என்பது மறுக்க முடியாத உண்மை. நிலவில் மனிதன் கால் பதித்து விட்டான். ஆனால் வரும் பேரழிவான சுனாமியை தடுக்க முடியுமா? ஆகவே,இந்த கூற்றை ஒத்துக்கொள்ள முடியாது. மனிதனுக்கும் அப்பாற்பட்ட , எளிதில் புரிந்துகொள்ள முடியாத சக்தி ஒன்று இந்த பிரபஞ்சத்தை தன்...