நம்மில் ராமாயணம்
ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் 1)ராமர்--பரமாத்மா,இவ்வுலகில் ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதனை வாழ்ந்துகாட்டிய மகான். 2)சீதை--ஜீவாத்மா 3)ராவணனன்---மனம் 4)அனுமன்--------குரு. சரி, இக்கதாபாத்திரங்கள் எவ்வாறு நம்மோடு பொருந்தும்? ராவணனின் மனம் ஆசையால் அலைகழிக்கப்படுகிறது.ராவணனுக்கு, பலர் பிறன் மனையை விழைவது தவறு,சிறை பிடித்தது தவறு என்று எடுத்யுரைகின்றனர். கேட்டானா? இல்லையே! மனதுள்ளே இருந்த ஆசை, ஆங்காரமாய் எழுந்து நின்று , உற்றார் ஒவ்வொருவரையும் இழக்க வைக்கிறது. ஜீவாத்மாகிய நம் மனமும்,கட்டுப்பாட்டை இழந்து ஆசை வலையில் அகப்பட்டு இங்கும் அங்கும் அலைகழிக்கப்பட்டு துன்புறுகிறது. ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தகுதியுள்ள ஒருவன் இலட்ச ரூபாய்க்கு ஆசைபடுகிறான்.அதற்காக போகாத வழிக்கெல்லாம் போய் அல்லலுற்று இருப்பதையும் இழந்து தவிக்கிறான்." நான் அதிர்ஷ்டமில்லா பாபி,எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம்" என்று அரற்றுகிறான். நாம் எல்லோரும் இறைவனின் வீட்டில் வாடகைக்குஇருப்பவர்கள் தான்.வந்தவேலை முடிந்தவுடன்,புறப்படும்போது,காதருந்த ஊசியைக்கூடநம்முடன் கொண்டு செல்ல முடியாது,என்பதை எல்லோரும...