Posts

Showing posts from November, 2022
Image
  அழுக்கு அழகுக்கு எதிரி.அழுக்கை யாரும் விரும்புவதில்லை. கண்ணாடியில் அழுக்கு படிந்தால்  பிம்பம் சரியாக தெரிகிறதா? இல்லையே! அதை தூய்மை படுத்தாவிட்டால் அது உபயோகமற்றதாகி விடுகிறது.அது மாதிரி தான் மனதில் அழுக்கு படிந்தால் , புறத்தே எவ்வளவு அழகாக இருந்தாலும் நம்மை ஒருவரும் விரும்பமாட்டார்கள் அழுக்கான எந்த பொருளின் எடையும் கூடுதலாகத் தான் இருக்கும். மனதில்அழுக்கு இருந்தாலும் மனபாரம்அதிகரிக்கத்தான் செய்யும்.  உதாரணமாக, நாம் ஒருவரைப்பற்றி புறம்கூறினோம் என்றால் அந்த பொய் நம் மனத்தை அழுத்திக் கொண்டுதான் இருக்கும்.  இந்த மன அழுக்குகள் பிறப்பிலேயே வருவதில்லை. நாம் வளர,வளர நம்முடன் தொடர்பில்உள்ளவர்கள் மூலமே இவை நிகழ்கிறது.  குழந்தை பிராயத்தில், தன் தாய் தன்னைவிடுத்து வேறு ஒரு குழந்தையின்பக்கத்தில் கவனத்தை செலுத்தும் போது ,அது பொறுக்காமல்,அழ ஆரம்பிக்கிறது. இங்கேதான் மனிதனின் நிர்மலமான மனதில் முதல் கறை படிகிறது.  அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.  பொறாமையின் விளைவாக ஆசை தலைதூக்கும். ஆசை நிறைவேறாவிட்டால், கோபம் தலை தூக்குகிறது. ...

மண் மகள்

Image
 ஆசையின் பிறப்பிடம் மண் தான். இந்த மண் நமக்கு பல பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. நாம்தான்அதை சரியாகபுரிந்து கொள்வதில்லைஅல்லது ஏற்றுக்கொள்வதில்லை. மண்ணில் தோன்றிய யாவும் மண்ணில் நிலைத்து நிற்பதில்லை. உதாரணமாக , ஒரு விதையை மண்ணில் ஊன்றி வைக்கிறோம். அது மண்ணை கிழித்துக்கொண்டு விருக்ஷமாக வளர்கிறது,பலன் கொடுத்து முடிந்தவுடன், "என்னிலிருந்துதானே வந்தாய், என்னிலேயே  அடங்குவாய்" என்று மண் மகள் அழைத்துக்கொள்கிறாள்.  மனிதனின் கதையும் இவ்வாறே முடிகிறது. வந்த காரியம் முடிந்தவுடன், மண் மாது அணைத்துக்கொள்கிறாள். மண் கற்றுக்கொடுக்கும் பாடம். 1) உலகத்தில் தோன்றியது எதுவும் நிலையானது இல்லை. 2)தோன்றிய இடத்திலேயே  தான் மறைய வேண்டும். 3) சேர்த்த பொன் , பொருள் , எதுவும் நாம் புறப்படும் போது எடுத்துக்கொண்டு போக முடியாது. ஐம்பூதங்களில் ஒன்றுதான் மண் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். ஆகாயத்தை தவிர மற்ற மூன்றும்  மண்ணின் மூலமாக சம்பந்தப்பட்டது தான்.மண்ணின் சம்பந்தமே ஆசையை வளர்க்கிறது. மண்ணின் மேல் பிறந்த இந்த பூதவுடல் மண்ணிலேயே புதைக்கப்படுகிறது அல்லது எரியூட்டப்படுகிறது. இது நம் ஒவ்வொருவரும...