Posts

Showing posts from August, 2022

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

Image
  கூட்டு அமைப்பிற்கு எப்போதும் வலிமை அதிகம். உதாரணத்திற்கு  தனிநபர் கோரிக்கைகள் எந்த இடத்திலும் எடுபடாது. அதுவே ஒரு கூட்டு அமைப்பான சங்கத்தின் மூலம் அணுகினால் பலன் விரைவில் கிட்டும். கூட்டு பிரார்த்தனை செய்தால் ,அது இறைவனை உடனே சென்றடைகிறது என்பது கண்கூடான உண்மை. அது போலவே கூட்டு குடும்பத்திலும் நன்மைகள் அதிகம் இல்+அறம்= இல்லறம் வீடு என்பது வெறும் கட்டிடம் தான்.அதற்கு உயிரோ,உணர்ச்சியோ கிடையாது. ஆனால் இல்லம் என்பது அதில் வசிக்கும் மனிதர்களை குறிக்கிறது. அந்த இல்லம் எப்படி இருக்க வேண்டும் என்றால் அறத்தை சார்ந்து இருக்க வேண்டும். இல்லம் என்பதை அதில் வாழும் குடும்பத்தினரை தான் குறிக்கிறது. வசிக்கும் வீடு  என்பது அதில் வாழும் குடும்பத்தினரின் ஒரு அடையாளம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா,அக்கா,தங்கை, அண்ணன், அண்ணி, தம்பி சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா,மாமா, அத்தை இவர்களெல்லாம் சேர்ந்ததே குடும்பம். கடந்த காலத்தில் குறைந்த பட்சம் மூன்று தலைமுறைகளாவது ஒரே வீட்டில்  வசிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று காலத்தின் கட்டாயத்தில தனி தனி வீடுகளில் வசிக்க வேண்டியுள்ளது. இத...

ஒருவனே தேவன்

Image
  ராமனே கிருஷ்ணன் , கிருஷ்ணனே ராமன் . இவ்வுலகில் மதங்கள் பல உள்ளன . ஒவ்வொரு மதத்திலும் வழிபடும் தெய்வங்கள் பல உள்ளன . மக்கள் தம் , தம் மதங்கள் உயர்வானது , தாம் வழிபடும் தெய்வங்களே உண்மையான தெய்வம் என்று நினைத்து மற்ற , தெய்வங்களை அலட்சியப்படுத்துகின்றனர் . அதனால்தான் அவ்வப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் போன்ற மகான்கள்   தோன்றி தாமே கிருத்துவனாக , முகமதியனாக வாழ்ந்து , எல்லா மதங்களும் ஒன்றே , அவர் தம் கடவுளர்களும் ஒன்றே என்று நிரூபித்துள்ளனர் . அவர்சொல்லுவார் ,” நீறு , பானி , வாட்டர் , வெள்ளம் ” எல்லா சொற்களும்  ஒரே பொருளான தண்ணீரைத் தான் குறிக்கின்றன.அவ்வாறே இறைவனை பல பெயர்களால் அழைத்தாலும் , ஒரே இறைவனைத்தான்குறிக்கிறது . இதைத்தான் திருமூலர் ,” ஒன்றே குலம் , ஒருவனே தேவன் ” என்கிறார் . மாணிக்க வாசகரோ , ” ஒருவன் என்னும் ஒருவன்காண்க ” என்கிறார் . இதை நிரூபிக்க பல நிகழ்வுகள் சான்றாக உள்ளது . இங்கே இதற்கு சான்றாக ஒருகதையை காண்போம் . மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலுக்கருகே ஒரு சிற்றரசன் தன் ராணியுடன் வசித்து வந்தான் . அவன் சிறந்த கிருஷ்ண பக்தன் , ராணியோ ராம பக்தை . இருந்தாலும் ஒரு...