Posts

Showing posts from April, 2022

எண்ணங்களின் வலிமை

Image
  நம் மனதில் எழும் எண்ணங்கள் ஆயிரம்,ஆயிரம்.இதில் எந்த எண்ணம் நம் தூக்கத்தை கெடுக்கிறதோ,எந்த எண்ணம் நம் மனதை முழுதும் ஆக்ரமித்துள்ளதோ அது நல்ல எண்ணமாக இருந்தாலும் சரி,இல்லை கெட்ட எண்ணமாக இருந்தாலும் சரி அதற்கே வலிமை அதிகம். ஒரு எண்ணம் செயல் வடிவம் எடுத்து அதன் பலனை கொடுப்பதற்கு இரண்டு விஷயங்கள்  தேவை. 1) மனதில் தெளிவும் 2)விடா முயற்சியும்,மன உறுதியும். வினை திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. எண்ணியஎண்ணியாங்குஎய்துபஎண்ணியார் திண்ணியராகப்பெறின். எண்ணங்களின் ஓட்டமே ஆசையாக வடிவெடுக்கிறது. ஆசை துன்பத்திற்கு மட்டும் காரணமாகாது,இன்பத்திற்கும் அதுவே காரணம் என்பதை அறிய வேண்டும். துன்பத்திற்கு காரணமான ஆசைகளை வளர்க்கும் எண்ணங்களை வளர விடாது முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். மாறாக இன்பம் தரக்கூடிய எண்ணங்களை வளர்க்க வேண்டும். அரசியலில் ஈடுபட்ட ஒருவனுக்கு குறுகிய காலத்திலேயே பணம்,பதவி,புகழ் வருகிறது என்று வைத்துக்கொள்வோம்.உடனே நானும் தான் மாறவேண்டும் என்ற தகாத எண்ணத்தை வளர விட்டால்,அது கிடைக்காத பட்சத்தில்எஞ்சுவதுஏமாற்றமும்,பணவிரயமும்தான். அதேசமயத்தில் ஒருவன் தன்னிலும்...

குணம்

Image
ஒருவருடைய குணங்கள் தான் அவருடைய இயல்பு என்ன என்பதை காட்டுகிறது.குணங்கள் எண்ணிலடங்காதிருப்பினும் அவைகளை மூன்றாக பிரித்தனர் நம் முன்னோர்கள்.அவை, 1) ரஜோ குணம் 2)தமோ குணம் 3)சத்வ குணம் இந்த மூன்றில் ஒரு குணத்துடன்தான் நாமெல்லாம் பிறக்கிறோம். இதைத்தான் பிறவிகுணம் என்கிறோம். இதை சிறிய உதாரணத்துடன் விளக்கலாமா! ஏழை ஒருவன் பசியால் வாடி வேலை ஒன்றும் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்கும் போது அவனைப்பார்த்து இரக்கமில்லாது , "நீ வாங்கி வந்த வரம் அப்படி! பேசாமல் எங்கேயவது மடத்தில் சேர்ந்து விடு,சோறாவது கிடைக்கும்".இது இரக்கமில்லாது பேசுபவர்கள் ரஜோ   குணத்தவர்.ஏன் இப்படி இரக்கமே இல்லாது பேசுகிறாய் என்று கேட்டால்,அவர்களிடம் சண்டை போடுவர்.இவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவேஇருப்பார்கள்.பேச்சிலும்,செயல்களிலும் வீச்சும்,வேகமும் இருக்கும். இரண்டாவது வகையினர் ,யார் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கண்டுக்கவே மாட்டார்கள்.எந்த இழப்பு யாருக்கு ஏற்பட்டாலும் இவர்கள் கண்டுக்கவே மாட்டார்கள் . கும்பகர்ணன் போல சாப்பிடுவதில்,தயங்குவதில்லை மிகுதியான சோம்பலிலேயே வாழ்நாளை கழிப்பர்.இவர்கள் தமோ குணத்தவர். மூன்றாம் வகையின...

வாழ்வாங்கு வாழ்தல்

Image
  "மானுடராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" வாழ்க்கை என்பது மனிதனாய் பிறந்தஒவ்வொருக்கும்வாய்க்கப் பெற்ற மிகப் பெரிய பேறு.அதை எவ்வாறு வாழ்கிறோம் என்பது தான் மிகப்பெரிய கேள்வி.நாம் வாழும் வகையில் தான் நமக்கு இன்பமும் துன்பமும் வாய்க்கப்படுகிறது. நாம் எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதல்ல விஷயம்,நாம்வாழ்ந்தகாலத்தில்மனிதனாகவாழ்ந்தோமாஎன்பதில் தான் அடங்கியுள்ளது நாம் பிறவி  எடுத்ததின் பயன். மனிதம் என்பது என்ன? தன் பயன் கருதாது பிறர் நலம் பேணுவதே!இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த நெல்சன் மண்டேலா,அன்னை தெரசா,நம்மஊர்காந்தியடிகள்,விவேகாநந்தர்அம்பேத்கார்,காமராஜர்,ஆப்ரஹாம் லிங்கன்,போன்றோரை சொல்லிக்கொண்டே போகலாம்.இவர்கள் எல்லாம் மனித நேயத்தோடு வாழ்ந்ததால் தான் இன்றும் நம் மனங்களில் வாழ்வாங்கு வாழ்கின்றார்கள "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற முதுமொழிக்கேற்ப நமக்கு ஏற்படும் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் நாமே தான் காரணம் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இது எப்படி? நம் ஒவ்வொருக்குள்ளும் மனசாட்சி என்ற உள்ளுணர்வு உள்ளதல்லவா?அது உள்ளதை மட்டுமே உரைக்கும்.பின் எப்படி தவறு நடக...