Posts

Showing posts from May, 2022

ஓம்

Image
  மனிதன் வளர,வளர எண்ணங்களும் வளர்கின்றன. தன் எண்ணங்களை பிறர்க்கு தெரிவிக்க சப்தங்கள் உதவுகின்றது. சில சத்தங்கள் சொற்களாக உருமாறி மொழியாக வடிவெடுக்கிறது.சப்தங்கள்வேறுபட,வேறுபடமொழியும்வேறுபடுகின்றதுகுறிப்பிட்டமொழியைஉபயோகப்படுத்தாது,வெறும்சப்தத்தாலேயே பிராணிகளிடமும் ,பறவைகளிடமும் உரையாடலாம். அந்த சப்தத்தை அவைகளும் புரிந்துகொண்டுஎதிர்வினையாற்றுகின்றன.அதனால்தான் நம் முன்னோர்கள் மந்திர ஓசைக்கு நல்லவிளைவுகள் உண்டு என்று சொல்லி வைத்தார்கள். மந்திர ஓசை உள்ள இடத்தில் எந்த எதிர்மறை எண்ணங்களும் செயல்படாது,மாறாகநேர்மறைஎண்ணங்களே வளரும். ஓம் என்ற பிராணமந்திரம்  மந்திரங்களிலேயே தலையாயது.மகன் தந்தைக்கு உபதேசம் செய்த மகா மந்திரம். அ+உ+ம்=ஓம் அ-உயிர் உ-முயர்ச்சி ம்-ஒடுக்கம் அ-உயிர் - அன்னையின் கருவறையில் உருவாகும் கருவிற்கு உயிர்கொடுப்பது இறைவன்.இவனுக்கு தோற்றமும் இல்லை , மறைவும் இல்லை.பந்தமும் இல்லை பாசமும் இல்லை.அதனால் தான் நாபியிலிருந்துவாய் வழியாக "அ" என்னும் ஓசை வெளி வரும் போது எதனுடனும் ஒட்டுவதில்லை. உ-முயர்ச்சி :-முயற்சி இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும்.உதடுகளை குவித்தால்தான் உ  என்...

உன் வாழ்க்கை உன் கையில்

Image
         ஆம்! இன்றைய பொழுது போனது, போனதே!  எவ்வளவு அழுது புரண்டாலும் இன்று பேசின பேச்சை நாளை திரும்ப வாங்க முடியாது. நாளை என்ன நடக்கும் என்பதும் தெரியாது. அதனால் தான் நாம் பேசுமுன் பல முறை யோசித்து வார்த்தைகளை  வெளியில் விட வேண்டும். வாழ்க்கை என்பது என்ன? யாரால் அது தீர்மானிக்கப்படுகிறது? பிறப்பு தான் நம் கையில் இல்லை,ஆனால் வாழ்க்கையோ நம் கையில் தான் உள்ளது! அது எப்படி? இந்த உலகம் இயங்க வேண்டுமெனில் செயல்கள்இருக்கவேண்டும்.நம்மூலமாகத்தான் ஆண்டவன் செயல்களை செய்விக்கிறான். நாம் எல்லோரும் கடவுளின் செயல்களை செய்யும் கருவிகளே!எவன்இதைஉணர்ந்துசெயல்களைசெய்கிறானோ, அவனுக்கு இனிமையான வாழ்க்கையை இறைவன் பரிசளிக்கிறான். வாழ்க்கை இனிமையாக அமைய மிக முக்கியமான விஷயங்கள் மூன்று:- 1)செய்யும் செயல்களில் ஊக்கமும் , ஈடுபாடும். 2)நம்மை சுற்றியுள்ளவர்களிடத்து அன்பும் , ஆதரவும் 3)     ஈசன் திருவடிகளில் சரணம். நாம் செய்யும் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்? படிக்கும் படிப்பாகட்டும்,செய்யும் தொழிலாகட்டும், நம்மனம் எந்த துறையில்  ஈடுபாடு கொண்டுள்ளதோ அந்த துறையை ...