கல்வி
எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணெண்ப வாழும் உயிர்க்கு " Education is the perfection which is already in man"- ---இது சுவாமி விவேகானந்தரின் கல்வியை பற்றிய கூற்று. ஆம்! கல்வி என்பது நமக்குள்ளே புதைந்திருக்கும் அறிவினை ஒளிரசெய்வதேயாகும். பிறந்த குழந்தைக்கு தவழ,நடக்க,யார் கற்றுக்கொடுக்கிறார்கள்? வாயில் வைக்கும் உணவை,மெல்லவோ, முழுங்கவோ யார் கற்றுக்கொடுக்கிறார்கள்? அதேமாதிரித்தான் பள்ளியில் ஆசிரியர்களும், புத்தகங்களும் கற்க வேண்டுபவற்றை எடுத்து கூறுகின்றனர். நாம்தான் நம் அறிவின் துணைகொண்டு அவற்றை புரிந்துகொள்கிறோம். கல்விஎன்பதுஏட்டோடுநின்றுவிடுவதில்லை.அதையும் தாண்டி செய்முறை பயிற்சினால் கிடைக்கும் அனுபவத்தால் நன்கு புரிந்துக்கொள்கிறோம்.இந்த அனுபவங்கள் நம் வாழ்க்கையிலும் பல பாடங்களை கற்றுத்தருகிறது. படிப்போடு நுண்ணறிவு,நுண்திறன்(softskill) உள்ளவர்களே வாழ்க்கையில் ஏறு முகத்தில் உள்ளனர். பேச்சுக்கலை என்பது யாரிடத்து, எப்போது,எவ்வாறு ,சுருக்கமாக,தெளிவாக பேசவேண்டும் என்பதாகும். படித்ததை நன்றாக உள்வாங்கிக்கொண்டு எதிரில் இருப்பவர்கள்குழப்பமும் இல்லாது தெளிவாக,அதேசமயம்கவர்ச...