Mugangal
வாழ்க்கைஎன்பதுஎல்லோருக்கும்,எப்போதும் ஒரே மாதிரி அமைவதில்லை. அப்படித்தான் எல்லோர் முகங்களும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்கள் எதிர் கொள்ளும் சம்பவங்களுக்கு தகுந்தவாறு அவர்களின் முகங்களும் மாறுகின்றது. அகம் தூய்மையாக இருந்தால் முகமும் தூய்மையாக இருக்கும். அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். தூய் மையான மனதின் சொந்தக்காரர்களின் முகத்தில் ஒரு தேஜஸ் இருக்கும். மற்றவர்களை அது எளிதில் ஈர்த்து விடும். விவேகாநந்தர் போன்ற பெரிய ஞானிகளின் ஒளி பொருந்திய முகங்களே இதற்கு சான்று. ஆண்டவனால் படைக்கப்பட்ட எல்லாருக்கும் முகம் உண்டு. அவன் படைப்பில் அழகு என்பது எல்லோருக்கும் ஏதோ ஒரு உறுப்பில் உள்ளது மற்றவர்களை கவரக்கூடிய முகத்தில் கூட ஏதாவது குறை இருக்கலாம். ஆனால் அதேசமயம் மற்றவர்களால் விரும்பாத முகத்தில் கூட ஏதாவது ஒரு உறுப்பு அழகாக இருக்கலாம்.அது தான் இறைவன் படைப்பின் ரகசியம். நாம் வாழும் காலங்களில் இறைவன் கொடுத்த முகத்தோடு மட்டும் நாம் வாழ்வதில்லை.சந்தர்பங்களுக்கு தக்கவாறு பல முகங்களை போட்டுக்கொண்டுதான் நாம் வாழ வேண்டியுள்ளது. இது ...