தவம் என்பது தனியாக ஓர் இடத்தில் அமர்ந்து இறைவனிடத்து ஒரு காரியம் நிறைவேற்றுமாறு வேண்டுவது மட்டும் தவமல்ல. ஒரு குறிக்கோளை அடைய , விடாது செய்யும் முயற்சி கூட தவமேயாகும். இது மூன்று வகைப்படும் . 1) காமிய தபஸ் :- துருவன் செய்தது,காரிய தபஸ். தான் உயர் நிலை அடைய செய்தது. இது சுயநலமானது. தனக்காக செய்வது. 2) அஸூர தபஸ்: - தன் உடலை வருத்தி செய்வது,இராவணன்,ஹிரண்யகசிபு போல. 3) தெய்வீக தபஸ்:- வால்மீகி,திருநாவுக்கரசர்,விவேகானந்தர், போல இந்த சமுதாயத்திற்காக,அதன் நன்மைக்காக செய்வது. இதில் மூன்றாவது வகை தபஸ் தான் எல்லாவற்றிலும் சிறந்தது.தன் நலம் கருதாது பிறர் நலம் கருதி செய்யும் தொண்டே சிறந்த தவம். ஏனென்றால் இவ்வுலகை படைத்த இறைவனின் மனம் மகிழ இவ்வுலகம் சிறப்புடன் வாழ தொண்டு செய்கிறார்கள் அல்லவா! தவம் என்பது உடல் ,மொழி, உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது. இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. உடலின் செய்யும் தவம்: - எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும் ,உடல் சோர்வடைந்தாலும், அதை பொருட்படுத்தாது, உடலை வருத்திக்கொண்டு எடுத்த காரியத்தைமுடிப்பது.உண்ணாநோன்பு,பூ மிதித்தல்,கிரி வலம் வருதல்,...
Comments
Post a Comment